சிலாபம் – ஆணமடுவை தனியார் பேருந்து பணியாளர்கள்  பணிப்புறக்கணிப்பில்…

சிலாபம் – ஆணமடுவை தனியார் பேருந்து பணியாளர்கள்  பணிப்புறக்கணிப்பில்…

சிலாபம் – ஆணமடுவை வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து பணியாளர்கள் இன்று(08) பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து நேர கண்காணிப்பாளர் ஒருவர், குறித்த வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதி ஒருவரை தாக்கியதாக தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு இடம்பெறுதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.