சாதாரண பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த 3 பேர் கைது…

சாதாரண பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த 3 பேர் கைது…

கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திககொட, கல்முனை, மற்றும் தனமல்வில் பகுதிகளிலே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று(10) நடைபெற்ற கணிதப் பாட பரீட்சைக்காக, உரிய பரீட்சாத்திகளுக்கு பதிலாக வேறு நபர்கள் பரீட்சைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.