12 வயதுச் சிறுமியுடன் சேர்ந்து கருகிய 2௦ உயிர்கள்

12 வயதுச் சிறுமியுடன் சேர்ந்து கருகிய 2௦ உயிர்கள்

ஆப்பிரிக்க நாடான கேமரூனில், நைஜீரியா மற்றும் சாட் ஆகிய நாடுகளின் எல்லையில் மரோயுவா என்ற நகரம் உள்ளது. இது கேமரூனில் உள்ள வர்த்தக நகரங்களில் ஒன்றாகும். அங்குள்ள ஒரு மதுபாரில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அப்போது அங்கு நுழைந்த 12 வயது சிறுமி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தாள்.

இத்தாக்குதலில் அங்கு இருந்த 20 பேர் உடல்கள் சிதறி பலியாகினர். 79 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இத்தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் போகா ஹாரம் தீவிரவாத அமைப்பு சிறுமிகள் அத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் இங்குள்ள மார்க்கெட்டில் 2 சிறுமிகள் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் 13 பேர் பலியாகினர்.

இதே போன்று நைஜீரியாவிலும் மனித குண்டு தாக்குதல் நடந்தது. வட கிழக்கில் உள்ள டமத்ரு நகரில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டில் ஒரு பெண் தீவிரவாதி புகுந்து தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டாள். அதில் 15 பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)