துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது…

துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது…

கம்பஹா, மாதம்மன பகுதியில் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கி ஒன்று, அதற்கான தோட்டாக்கள் 4 மற்றும் மெகசின் ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, கைது செய்யப்பட்ட நபரிடம் ​மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த தொழிலில் ஈடுபட்டு வரும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.