வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது…

வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது…

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட் தொகையினை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த ஒருவர் இன்று(29) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து பயணித்துள்ள குறித்த நபர் பயண பொதியில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

11 லட்சம் பெறுமதியான சிகரெட்கள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாத்தன்டிய – கோட்டரமுல்ல பிரதேசத்தினை சேர்ந்த 20 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.