பள்ளத்தில் பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு…

பள்ளத்தில் பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு…

மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாட்டோ மாநிலத்தில் சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

லேகான் நகரத்தின் அருகே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து, சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நிறைமாத கர்ப்பிணி உட்பட காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.