பிரதமர் மற்றும் சோபித தேரருக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை

பிரதமர் மற்றும் சோபித தேரருக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் பல சிவில் அமைப்புக்களுக்கு இடையில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று (28) இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் உட்பட்ட 75 பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இப்புரிந்துணர்வு உடன்படிக்கையில் முக்கியமாக 19வது திருத்தத்தின் கீழ் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்தல் உட்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றன.

(riz)