ஹிஸ்புல்லா’வின் பாராளுமன்ற பதவி வெற்றிடத்திற்கு பெயரினை பரிந்துரைக்க கோரிக்கை…

ஹிஸ்புல்லா’வின் பாராளுமன்ற பதவி வெற்றிடத்திற்கு பெயரினை பரிந்துரைக்க கோரிக்கை…

தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் சென்ற உறுப்பினர், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் இராஜினாமாவை தொடர்ந்து, பதவி வெற்றிடத்துக்கு தகுதியான ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு, இன்று(07) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படும் என தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் எம்.எம். மொஹமட் தெரிவித்திருந்தார்.

ஹிஸ்புல்லாவின் இராஜினாமாவை அடுத்து, குறித்த பதவி வெற்றிடம் நிலவுவதாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரிடமிருந்து பெயர் கிடைத்தவுடன், குறித்த பெயர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும். அதன் பின்னரே எம்.பி, பதவிக்கான வெற்றிடம் நிரப்பப்படும் என பாராளுமன்றச் செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடந்த 04ம் திகதி அறிவித்திருந்தார்.

தன்னுடைய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து கொண்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுநராக கடந்த வௌ்ளிக்கிழமை(04) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.