இந்நாட்டின் கிரிக்கட் ஊழல், மோசடி தொடர்பிலான அறிக்கையினை வழங்க ஐசிசி 02 வாரகால அவகாசம்…
இந்நாட்டு கிரிக்கட் விளையாட்டின் ஊழல் , மோசடி தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச கிரிக்கட் சபை இலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கியுள்ளது.
குறித்த காலப்பகுதியில் சர்வதேச கிரிக்கட் சபையில் அலுவலகமொன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், குறித்த செயற்பாடுகளுக்காக அதன் பிரதிநிதியான ஸ்டீவ் ரிசட்சன் இலங்கை வந்துள்ளார்.
குறித்த இந்த இரண்டு வார காலத்தினுள் கிரிக்கட் ஊழல் , மோசடி தொடர்பிலான அறிக்கையினை பெற்றுக்கொடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.