மிரிஸ்ஸ சுற்றுலா வலய படகு சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை..
மிரிஸ்ஸ சுற்றுலா வலயத்தை அண்மித்த பகுதியில் திமிலங்களை பார்வையிடுவதற்கான படகு சேவையை விரிவுபடுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
குறித்த வலயத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.