பெண்கள் குறித்த சர்ச்சையில் சிக்கிய பாண்ட்யா வீட்டிலேயே முடங்கக் காரணம்…?

பெண்கள் குறித்த சர்ச்சையில் சிக்கிய பாண்ட்யா வீட்டிலேயே முடங்கக் காரணம்…?

இந்திய அணி வீரரான ஹர்திக் பாண்ட்யா தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து பேசியதற்காக ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவரையும் கடந்த வாரம் பிசிசிஐ இடைநீக்கம் செய்து நாட்டிற்கு திரும்ப அனுப்பியது.

எனவே, பாண்ட்யா வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை என்றும், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும் பாண்ட்யாவின் தந்தை ஹிமான்ஷூ கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஆங்கில ஊடகமான மிட்-டேவுக்கு பேட்டி அளித்துள்ளார், அதில்;

“அதில் குறிப்பிட்டுள்ளது, `ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பின்னர், அவர் வீட்டைவிட்டே வெளியே வரவில்லை என்றும். அதேபோல், தனக்கு வரும் செல்போன் அழைப்புகளையும் அவர் எடுப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் நாங்கள் வசிக்கும் பகுதியில் இது பண்டிகை காலம் என்றும், இந்த நாட்களில் இளைஞர்கள் பட்டம் விட்டு விளையாடுவர்கள்.

பாண்ட்யா கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டில் இருப்பதால் இதில் கலந்து கொள்வதில்லை. ஆனால் இந்த வருடம் வீட்டில் இருந்தும் அவர் அந்நிகழ்ச்சிக்கு வெளியில் வரவில்லை..” என்று கூறியுள்ளார்.