தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 245 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 245 பேர் கைது

தேர்தலுடன் தொடர்புடைய பல்வேறுபட்ட சட்ட மீறல்கள் தொடர்பில் 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்க்கின்றனர் .

தேர்தல் சட்ட மீற்ல்கள் தொடர்பில் 89 சுற்றிவலைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

குறித்த சுற்றி வலைப்பின் போது 212 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் தேர்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அடுத்து 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

பொதுத் தேர்தல் தொடர்பில் இத வரை 100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்
தெரிவித்துள்ளது.