சாதாரண தரப் பரீட்சைக்கான தேசிய அடையாள அட்டைக்கு மார்ச் 31ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவும்..

சாதாரண தரப் பரீட்சைக்கான தேசிய அடையாள அட்டைக்கு மார்ச் 31ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவும்..

(FASTNEWS | COLOMBO) – 2019 கல்வியாண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் வியாணி குணதிலக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த விண்ணப்பங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் குறித்த திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு பாடசாலை அதிபர்கள் ஊடாக அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

15 வயது பூர்த்தியான அனைத்து மாணவிகளுக்கும் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.