கொழும்பின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர் விநியோக தடை…

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர் விநியோக தடை…

(FASTNEWS-COLOMBO) எதிர்வரும் 02 ஆம் திகதி பிற்பகல் 09 மணி முதல் ஞாயிற்றுகிழமை(03) பிற்பகல் 03 மணி வரை, 18 மணித்தியாலங்களுக்கு கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோக தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 13.14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.