மணல் அகழ்வுக்கான தடை இன்று(01) முதல் நீக்கம்…

மணல் அகழ்வுக்கான தடை இன்று(01) முதல் நீக்கம்…

(FASTNEWS| COLOMBO)- தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருகோணமலை மாவட்டத்தில், மணல் அகழ்வுக்கான அனுமதியை இன்று(01) முதல் மீண்டும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டச் செயலகத்தில், நேற்று(28) நடைபெற்ற கலந்துரையாடலில், 2018 டிசெம்பர் 31ஆம் திகதியிலிருந்து இடை நிறுத்தப்பட்டிருத்த இடைக்கால தடை உத்தரவை நீக்குவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதன் பின்னரே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.