நோர்வே வௌியுறவுத்துறை அமைச்சர் இலங்கை விஜயம்…

நோர்வே வௌியுறவுத்துறை அமைச்சர் இலங்கை விஜயம்…

(FASTNEWS-COLOMBO) நோர்வே வௌியுறவுத்துறை அமைச்சர் மெரிஏன் ஹேகன், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

மேலும் , காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் குழுவொன்றையும் நோர்வே வௌியுறவுத்துறை அமைச்சர் சந்திக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அந்நாட்டு தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.