நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் நாளை(05) இலங்கை விஜயம்…

நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் நாளை(05) இலங்கை விஜயம்…

(FASTNEWS-COLOMBO) நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மரியானா ஹேகன் நாளை(05) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பில் உள்ள நோர்வேயின் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமுக அமைப்புகள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றன.