முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தொடர்ந்தும் விளக்கமறியல்…

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தொடர்ந்தும் விளக்கமறியல்…

(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை தொடர்ந்தும் இம்மாதம் 19ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை – நீதிவான் நீதிமன்றம் இன்று(06) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிற்கு சம்பந்தம் இருப்பதற்கான சாட்சிகள் போதுமான அளவு இருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களமும் சட்ட மா அதிபர் திணைக்களமும் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.