பொலிஸ் கான்ஸ்டபிளனது தாக்குதலுக்கு இலக்காகிய பிரதேச சபை உறுப்பினர் வைத்தியசாலையில்…

பொலிஸ் கான்ஸ்டபிளனது தாக்குதலுக்கு இலக்காகிய பிரதேச சபை உறுப்பினர் வைத்தியசாலையில்…

(FASTNEWS |COLOMBO)- பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகிய ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாத்தாண்டிய பிரதேச சபை உறுப்பினர் சிசில் விக்ரமசிங்க, மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸ் நிலைய உயரதிகாரி தெரிவித்திருந்தார்.