சிறைச்சாலை கட்டுப்பாட்டாளரின் சேவை இடைநிறுத்தம்

சிறைச்சாலை கட்டுப்பாட்டாளரின் சேவை இடைநிறுத்தம்

(FASTNEWS|COLOMBO) பாடகர் நதீமால் பெரேராவுடன் டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட பின் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை கட்டுப்பாட்டாளரான லலித் குமாரவின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அறிவிக்காமல் வெளிநாடு சென்றமை காரணமாக இவ்வாறு அவரது சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கட்டுப்பாட்டாளர் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜயசிறி தென்னகோண் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அவர் நாடுகடத்தப்பட்ட பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர், கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.