வஸீம் தாஜுடீனின் சடலத்தினை 10ம் திகதி தோண்ட நீதிமன்ற உத்தரவு

வஸீம் தாஜுடீனின் சடலத்தினை 10ம் திகதி தோண்ட நீதிமன்ற உத்தரவு

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு அனுமதி வழங்குவதா, இல்லையா என இன்று வியாழக்கிழமை(6) இறுதி தீர்ப்பை அறிவிப்பதாக புதுக்கடை 3ம் இலக்க நீதிவான் நிஸாந்த பீரிஸ் நேற்று அறிவித்ததினைத் தொடர்ந்து, இன்று அதற்கான நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளது.

வஸீம் தாஜுதீனின் சடலத்தினை எதிர்வரும் 1௦ம் திகதி தோண்டியெடுப்பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் குறித்த சடலத்தினை தோண்டும் வரையில் தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(riz)