நல்லாட்சியில் குடிநீருக்கு வரி – மஹிந்த

நல்லாட்சியில் குடிநீருக்கு வரி – மஹிந்த

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் குடி நீரிற்கும் வரி அறவிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இன்னும், அது குறித்த பத்திரம் அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்காக சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே குறித்த கருத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

(riz)