தாக்குதலுக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவிய வேன் கண்டுபிடிப்பு…

தாக்குதலுக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவிய வேன் கண்டுபிடிப்பு…

(FASTNEWS|COLOMBO) சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றினை மரதங்கடவொல, இகல புளியம்குளம் பகுதியில் வைத்து பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

250-5680 என்ற இலக்கத்தை உடைய வேன் ஒன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட வேன் கெகிராவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் , வேன் வாகனத்துடன் சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.