காவிங்கவின் கையொப்பத்துடன் UNP கத்தோலிக்க MP’க்கள் மஹிந்தவுக்கு கடிதம்..

காவிங்கவின் கையொப்பத்துடன் UNP கத்தோலிக்க MP’க்கள் மஹிந்தவுக்கு கடிதம்..

(FASTGOSSIP|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நிலையற்ற மற்றும் பாதுகாப்பற்ற நாட்டின் நிலைமையினை மாற்றுவது தொடர்பிலான யோசனைகள் உள்ளடங்கிய கடிதம்  ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநித்துவப்படுத்தும் கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாரித்த கடிதம் ஒன்று நேற்றைய தினம்(05) எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர்.

குறித்த அறிக்கையில் பிரதியொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோரது கையொப்பத்துடன் குறித்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவினால் கையளிக்கப்பட்டுள்ளது.