களுத்துறை அண்டிய பிரதேசங்களுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு..

களுத்துறை அண்டிய பிரதேசங்களுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு..

(FASTNEWS | COLOMBO) – அவசர திருத்தப் பணிகளின் காரணமாக களுத்துறையில் நாளை(08) காலை 08.00 மணி தொடக்கம் இரவு 08.00 மணி வரையில் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி வாதுவ, வஸ்கடுவ, களுத்துறை – வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பேருவளை, அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு இடம்பெறுமென குறித்த சபை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.