கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி

பண்டாரவளை எடம்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு தீவிரம் அடைந்ததில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஹாலிஎல, தீகல்ல பிரதேசத்தில் வசிக்கக் கூடிய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் எடம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(riz)