வஸீம் தாஜுதீனின் சடலம் தோண்டும் பணியில் – ஊடகங்களுக்கு தடை

வஸீம் தாஜுதீனின் சடலம் தோண்டும் பணியில் – ஊடகங்களுக்கு தடை

கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் சடலமானது இன்று தெஹிவளை ஜும்மா பள்ளி மையவாடியிலிருந்து தோண்டப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நீதிமன்ற கட்டளைக்கமைய வைத்திய அதிகாரிகள்,பொலிசினர் மற்றும் தெஹிவளை கிராம சேவகர் ஆகியோர் குறித்த இடத்திற்கு சமூகமளித்துள்ளனர்.

வஸீமினது உறவினர்களின் விசேட வேண்டுகோளுக்கிணங்க ஊடகவியலாளர்களுக்கு புகைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சடலமானது தோண்டியெடுத்ததன் பின்னர் நீதிமன்ற வைத்திய அதிகாரியால் ஊடகவியலாளர்களுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளார்.

இன்னும் அதி கூடிய பாதுகாப்புடன் குறித்த சடலமானது தோண்டியெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(riz)