சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜை கைது

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜை கைது

(FASTNEWS|COLOMBO) – விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டுப் பிரஜை ஒருவர் நீர்கொழும்பு, எத்துகால பிரவுன்ஸ் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

27 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், நேற்று நீர்கொழும்பு பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.