ஐ.தே.க சடலங்களை தோண்டி வாக்குகளை கோருகின்றது – டிலான்

ஐ.தே.க சடலங்களை தோண்டி வாக்குகளை கோருகின்றது – டிலான்

தேர்தல் நடவடிக்கைகளில் வங்குரோத்தடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தோண்டியெடுக்க வேண்டிய சடலத்தை விடுத்து அவர்களுக்கு பொருத்தமற்ற வேறு சடலங்களை தோண்டுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு பொருத்தமற்ற வேறு சடலங்களை தோண்டியெடுத்து கட்சியின் வாக்குகளை அதிகரித்துக்கொள்ள முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பொது தேர்தல் குறித்து புத்திஜீவிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழுக்களினால தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய முன்னணி 118, 114 அல்லது 112 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளதாக டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

(riz)