கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று(12) அடியார்களுக்காக மீளவும் திறப்பு

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று(12) அடியார்களுக்காக மீளவும் திறப்பு

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று(12) மாலை 5.00 மணிக்கு அடியார்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது.

நாளை(13) இடம்பெறவுள்ள புனித அந்தோனியாரின் வருடாந்த நிகழ்விற்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருப்பலி பூஜை நாளைய தினம் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.