இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பெண்கள் உயிரிழப்பு
(FASTNEWS|COLOMBO) – அனுராதபுரம் – தலாவ பிரதேசத்தில் இன்று(30) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
லொறி ஒன்றுடன் வேன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வேனில் பயணித்த மேலும் 03 பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதி மற்றும் இரு உதவியாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.