கடற்பகுதிகளில் காற்றின் வேகம் நாளை(01) முதல் அதிகரிப்பு

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் நாளை(01) முதல் அதிகரிப்பு

(FASTNEWS | COLOMBO) – புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் நாளை(01) முதல் 65 கி.மீ வரை அதிகரிக்குமென, வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வு கூறியுள்ளது.

இதன்ப​டி மீன்பிடி, கடற்றொழில்களில் ஈடுபடுவோர் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மஹவெவ – தொடுவாவ பிரதேசத்தில் பலத்த காற்று வீசக்கூடும் அபாயம் காணப்படுவதாகவும், இதனால் கடலலைகள் உயர்வடையும் நிலையில் அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.