பதவியில் இருந்து விலகிய ஆளுநர்களை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைப்பு

பதவியில் இருந்து விலகிய ஆளுநர்களை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைப்பு

(FASTNEWS | COLOMBO) – ஆளுநர் பதவிகளிலிருந்து விலகிய மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன மற்றும் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் ஆகியோர் இன்று(05) ஜனாதிபதி செலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன ஆகியோர் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்றுமுன்தினம் (03) ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தனர்.

ஜனாதிபதி செயலகம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை தான் கையளித்ததாக மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.