பாகிஸ்தான் வைத்தியர்களை வெளியேறுமாறு சவுதி அரேபியா உத்தரவு

பாகிஸ்தான் வைத்தியர்களை வெளியேறுமாறு சவுதி அரேபியா உத்தரவு

(FASTNEWS|COLOMBO ) – சவுதி அரேபியாவில் பணியாற்றும் பாகிஸ்தான் வைத்தியர்களை உடனடியாக வெளியேருமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் எம்.எஸ். மற்றும் எம்.டி. போன்ற முதுகலை மருத்துவப்படிப்பின் தரம் மற்றும் பயிற்சி சிறப்பானதாக இல்லை என கூறி அதன் அங்கீகாரத்தை சவுதி அரேபியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

இதையடுத்து சுகாதார சிறப்புகளுக்கான சவுதி ஆணையம் (எஸ்.சி.எப்.எச்.எஸ்) அங்குள்ள பாகிஸ்தான் வைத்தியர்களுக்கு பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதங்களை அனுப்பி உள்ளன.