மஹேலவின் கழுகுப் பார்வையில் இருந்து திசை திரும்பும் மாலிங்க

மஹேலவின் கழுகுப் பார்வையில் இருந்து திசை திரும்பும் மாலிங்க

(FASTGOSSIP|COLOMBO)- கடந்த 1997-ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை இலங்கை அணிக்காக விளையாடிய கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தன, சிறந்த துடுப்பாட்ட வீரராவர்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்கள் பட்டியலில் டாப் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், மஹேல ஜெயவர்த்தனவிடம், இந்தக்காலத்தில் இருக்கும் பந்து வீச்சாளர்களில் யார் உங்களுக்கு நெருக்கடி கொடுப்பார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று பதிலளித்துள்ளார்.

மஹேல ஜெயவர்த்தன ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக தான் சந்தித்த பந்து வீச்சாளர்களில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க என்னை ஆச்சரியத்தில் உறைய வைத்தவர் என மஹேல ஜயவர்த்தன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.