சட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்
(FASTNEWS|COLOMBO ) – சட்டவிரோத மதுபானம் தொடர்பான சுற்றிவளைப்புக்காக பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் இன்று(19) முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 1913 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம் எனவும் குறித்த இந்த உடனடி அழைப்பு இலக்கத்தில் கிடைக்கும் முறைப்பாடுகளின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் எமவும் மதுவரித் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபானத்தை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் கொண்டு செல்லல் என்பன தொடர்பில் முறைப்பாடு தெரிவிக்க முடியும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.