இன்றைய போட்டியில் 100  விக்கெட் – சாதனை படைப்பாரா லசித்

இன்றைய போட்டியில் 100 விக்கெட் – சாதனை படைப்பாரா லசித்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று(01) இரவு 7.00 மணிக்கு கண்டி – பல்லேகலை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், இன்று ஆரம்பமாகவுள்ள தொடரில் 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றினால், இலங்கை அணித் தலைவர் லசித் மாலிங்க, சர்வதேச 20க்கு 20 கிரிக்கட் போட்டிகளில் 100 விக்கட்டுக்களை வீழ்த்திய முதலாவது வீரராக சாதனை படைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்தை கருத்திற்கொண்டுள்ள இரண்டு அணிகளும் புதிய சில வீரர்களை அணிக்குள் அழைத்து மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளன.

புதிய வீரர்களுடன் களமிறங்கும் நியூசிலாந்து அணியானது, இந்த தொடரின் மூலமாக தங்களுடைய எதிர்கால இருபதுக்கு – 20 வீரர்களை அடையாளம் காண்பதற்கு தயாராகியுள்ளது. பயிற்சிப் போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த அணி முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பிக்க காத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.