தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது தேசிய மாநாடு இன்று

தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது தேசிய மாநாடு இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது தேசிய மாநாடு இன்று(08) பிற்பகல் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் தலைமையில் சுகததாச உள்ளக அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது 11 மூலோபய வழிகள் அடங்கலாக, நாட்டை கட்டியெழுப்புவதற்கான யோசனைகளை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் அது தொடர்பான ஆவணம் கையளிக்கப்படவுள்ளது.