நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஒக்டேய்ன் 92 மற்றும் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் இரண்டு ரூபாவாலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் இரண்டு ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒட்டோ டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.