தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 27ஆம் திகதி

தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 27ஆம் திகதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் (13) நிறைவுக்கு வருகின்றது.

இன்றைய தினத்துக்குள் காலி மாவட்ட செயலகத்தில் விண்ணப்பங்களை ஒப்படைக்க முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.