உயிர்த்த ஞாயிறு போன்றதொரு தாக்குதலா?

உயிர்த்த ஞாயிறு போன்றதொரு தாக்குதலா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலை போன்றதொரு தாக்குதலை நடத்த இராணுவத்துடன் இணைந்து சிலர் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தப்பத்து வெளியிடுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலிச் செய்திகளால் நாட்டு மக்களின் மத்தியில் பெரும் அச்சம் தோன்றியுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த பொய்யான கதையை உருவாக்கிய நபர்களை அடையாளம் காண குற்றவியல் புலனாய்வுத் துறையுடன் இணைந்து இராணுவமும் விசாரணையைத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.