தேர்தல் காலத்தில் சமூக வலைதளங்கள் பாவனைக்கு தடை – மஹிந்த கருத்து

தேர்தல் காலத்தில் சமூக வலைதளங்கள் பாவனைக்கு தடை – மஹிந்த கருத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் தேர்தல் காலத்தில் சமூக வலைதளங்கள் பாவனையானது தடை செய்யப்படும் என கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய கருத்துத் தெரிவிக்கையில்;

“எச்சந்தர்ப்பத்திலும் சமூக வலைதளம் என்பதை கட்டுப்படுத்த முடியாது. அது வெறும் ரபர் பந்து ஒன்று நீரில் மூழ்குவது போன்றதாகும்.. எனினும், நாம் காரணங்களை தெளிவுபடுத்தி, விசேடமாக இளைஞர்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அறிவுறுத்த முடியும். அதனை விடுத்து கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தினை நாம் தடை செய்ய எண்ணியதில்லை..” எனத் தெரிவித்திருந்தார்.