வாழ்கையை மாற்றிய முகப்புத்தக பதிவு (கண்ணான கண்ணே பாடல் இணைப்பு)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திரு மூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணாண கண்ணே பாடலை பாடியதை தீ. அஜித் மதன் என்பவர் பதிவு செய்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு திரு மூர்த்தியின் வாழ்கையை இந்த அளவு மாற்றும் என எவரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

அந்த காணொளியில் பார்வையற்ற திரு மூர்த்தி என்ற இளைஞர் விஸ்வாசம் திரைப்படத்தில் டி இமான் இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடிய கண்ணான கண்ணே பாடலை பாடுகிறார்.

குறித்த காணொளியை பார்த்த இமான், இந்த பாடலை பாடியவர் குறித்த விவரங்களைக் கேட்டு தெரிந்துகொண்டுள்ளார்.

பின்னர், அந்த இளைஞர் குறித்த தகவல்களை திரட்டி, அவருடன் தொடர்புகொண்டுள்ளார், திருமூர்த்திக்கு அடுத்த படத்தில் வாய்ப்பளிப்பதாகவும் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பார்வையற்றவர் இவருக்கு சிறும் வயதிலே தாயை இழந்துள்ளார். தாயின் நினைப்பில் இதுபோன்ற பாடல்களை பாடிக்கொண்டே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் குறித்த காணொளியை 288, 273 பேர் பார்க்கிறார்கள், 802 பேர் ஷேர் செய்கிறார்கள். இதில் இசையமைப்பாளர் டி.இமானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.