நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவு அநுரவுக்கு

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவு அநுரவுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் ஊழல் நிறைந்த அரசியலுக்கு எதிராக தனது முன்னணியின் ஆதரவை தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் அநுர குமார திஸாநாயக்கவிற்கு வழங்குவதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(26) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் குறித்த முன்னணி இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

கிழக்கு மாகாணத்தில் உருவான இந்த கட்சி அதன் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.