பயங்கரவாதத்திற்கு இந்தியா நிதியுதவி வழங்குகின்றது – பாகிஸ்தான் அமைச்சர்

பயங்கரவாதத்திற்கு இந்தியா நிதியுதவி வழங்குகின்றது – பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாதான் நிதியுதவி அளிக்கிறது என அந்நாட்டு உள்துறை அமைச்சர் சௌத்ரி நிஸார் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலில் பஞ்சாப் உள்துறை அமைச்சர் கொலை செய்யப்பட்டது என அனைத்துக்கும் இந்தியாதான் நிதியுதவி செய்கிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களை துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

(riz)