பதாகைகள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் இன்று முதல் தடை

பதாகைகள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் இன்று முதல் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வது தொடர்பான சட்டத்தின் விதிகளுக்கமைய தேர்தல் தொடர்பான பதாகைகள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் மற்றும் பேரணியில் ஈடுபடுவது இன்று(07) முதல் தடைசெய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.