நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ

நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (12) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 12.00 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூவ்- 468 ரக விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.