இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணத்திலும் காலி, மாத்தறை, அநுராதபுரம், வவுனியா மாவட்டங்களிலும் இன்றிரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் காற்றின் வேகமானது மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.