ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 673 முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 673 முறைப்பாடுகள் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – .கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் நேற்று(15) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 673 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 650 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் மற்றும் 17 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற் (15) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 75 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.