டோனியின் ஓய்வு 24 ஆம் திகதி

டோனியின் ஓய்வு 24 ஆம் திகதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் 24 ஆம் திகதி ஆலோசிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி. 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற அவர் தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறார்.

அண்மையில் நடைபெற்ற உலக கிண்ண போட்டிக்கு பின் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தகவல் வெளியானது. ஒய்வு குறித்து டோனியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், டோனியின் எதிர்காலம் குறித்து 24 ஆம் திகதி ஆலோசிக்கப்படும் என முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 24 ஆம் திகதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக 20 ஓவர் போட்டிக்காக இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.